பல்லாவரம் பகுதியில் எஸ்ஐஆர் படிவம் வழங்கலில் கோளாறு – மக்கள் அதிருப்தி!

Date:

சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பல பகுதிகளில், வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, பல்லாவரம் தொகுதியில் உள்ள அஸ்தினாபுரம் பகுதியின் பல வார்டுகளில் இதுவரை எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்படாததால், மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வட்டாட்சியர் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் தீர்வு இல்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், தேவையான படிவங்களைப் பெறப் பெரும்பாலும் வாக்குச்சாவடிக்கு நேரில் வரும்படி தொடர்ந்து அழைக்கப்படுவதாக மூத்த குடிமக்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாகிஸ்தானின் சதி முயற்சியை தடை செய்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கு உயரிய பாராட்டு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தத்...

உலகம் முழுவதும் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் கொலை—ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

பெண்கள் மீது நடைபெறும் வன்முறை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு...

20 லட்சம் வாக்காளர்களை அடைய முடியாமல் தடுமாறும் வாக்குச்சாவடி அலுவலர்கள்!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் விபர திருத்தப் பணியில், சுமார் 20...

கூட்டு பட்டாவில் இனி வாரிசுகள் பெறும் சொத்து பங்கு தெளிவாக குறிப்பிடப்படும்: வருவாய்த்துறை

வாரிசுகளுக்கான கூட்டு பட்டா வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக...