மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் சேவையை மீண்டும் தொடங்க கோரிக்கை

Date:

மயிலாடுதுறை–தரங்கம்பாடி ரயில் சேவையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தப் பாதை மீட்புக் குழுவினர் வலியுறுத்தினர். ரயில் சேவை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலைய நுழைவாயிலில் சிறப்பு விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ரயில் மீட்பு குழு உறுப்பினர்கள் பங்கேற்று பழைய அனுபவங்களை நினைவுகூர்ந்தனர். பின்னர் அனைவரும் ஒன்றுக்கொன்று இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு வழக்கறிஞர் ரயில் ராஜேந்திரன் கூறியதாவது: மக்கள் நடத்திய பல்வேறு போராட்டங்களின் பின்னர், 2010ஆம் ஆண்டு ₹175 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அது முன்னேற்றமின்றி ஒதுக்கி வைக்கப்பட்டது என தெரிவித்தார்.

2026–2027 மத்திய பட்ஜெட்டில் இந்த ரயில் சேவையை மீண்டும் செயல்படுத்த தேவையான நிதி ஒதுக்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

S.I.R படிவம் உதவியது! – 21 ஆண்டுகளாக ஒளிந்திருந்த கொலை குற்றவாளி சிக்கினார்

சென்னை எண்ணூரில் நடந்த பழைய கொலைக்கான முக்கிய குற்றவாளி, S.I.R படிவம்...

சிறிய தவறுகளுக்குத் தண்டனை இல்லை: நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சட்டம் – பியூஸ் கோயல்

தொழில் நிறுவனங்களில் ஏற்படும் சிறிய குறைபாடுகள் அல்லது தவறுகளுக்கே கூட குற்றவியல்...

“மின்சாரம் எப்போது வரும்?” – 40 ஆண்டுகளாக இருளில் வாழும் 35 குடும்பங்கள்!

  நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல உழைத்தவர்களே, தங்களுக்குக் கூட...

பல்லாவரம் பகுதியில் எஸ்ஐஆர் படிவம் வழங்கலில் கோளாறு – மக்கள் அதிருப்தி!

சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பல பகுதிகளில், வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர்...