லுக் அவுட் நோட்டீஸ் விவகாரம் – 3 வாரங்களில் பதிலளிக்க ED-க்கு உயர்நீதிமன்றம் ஆணை

Date:

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த லுக் அவுட் நோட்டீஸ் ரத்து மனுவிற்கு பதிலளிக்க, அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் ஶ்ரீவஸ்தவா மற்றும் அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை போது, அசோக் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் ஏன் பிறப்பிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமலாக்கத்துறை பதிலளித்ததில், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கிய வழக்கில் அசோக் குமார் தொடர்பு உள்ளதாகவும், அவருக்கு 9 முறை சம்மன் அனுப்பியபோதும் ஆஜராகாததால் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ED தனது விளக்கத்தை 3 வாரங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம்

கும்பகோணம் அருகே மாணவர் தாக்கி உயிரிழப்பு – குடும்பத்தார் போராட்டம் தஞ்சை மாவட்டம்...

கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான பேரிழப்பு

கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான...

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல்

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் போல் நடனமாடிய சீனப் பெண்ணின் வீடியோ வைரல் சீனாவின்...

“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு

“தீபம் ஏற்ற சிரமம் என்றால் நாங்களே ஏற்றி விடுகிறோம்” – திருப்பரங்குன்றம்...