தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம் – நோயாளிகள் அவதி

Date:

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இஎஸ்ஐ (ESI) மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் தேங்கி, அங்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருவோருக்கு கடும் அவதியாகியுள்ளது.

மருத்துவமனைக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு கூட எளிதில் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சிலர் தண்ணீரை கடந்துவந்தும், சிலர் வேறு வழிகளைத் தேடியும் மருத்துவ சேவைகளை அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை பம்ப் மூலம் வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

டெல்லி தாக்குதலைச் சுற்றிய புதிய வெளிச்சம் – உமர் நபி மற்றும் கூட்டாளிகள் இடையே ஆழமான சித்தாந்த முரண்பாடு!

டெல்லியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்துக்கு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில்,...

சேலத்தில் தலைவாசல் காய்கறி சந்தை சேறும், சகதியுமாக… விவசாயிகள் சங்கம் அதிருப்தி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தை, தொடர்ச்சியான...

கார்ல்சனை வீழ்த்திய குகேஷ் – இந்திய சதுரங்கத்தின் எதிர்காலம் அவரது கையில் உள்ளது: எடப்பாடி பழனிசாமி பாராட்டு

நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சனை சந்தித்து வெற்றி...

புலி தாக்குதலில் உயிரிழந்த பழங்குடியின வயதான பெண்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் சரணாலயம் அருகே, புலி தாக்கியதில்...