திமுக கொள்கை ‘கொள்ளை’ மட்டுமே – தவெக தலைவர் விஜய் விமர்சனம்

Date:

மக்கள் நலனைக் கருத்தில் கொள்ள திமுக அரசுக்கு நேரமில்லை; திமுக கொள்கையே கொள்ளையாக இருக்கிறது என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதில், காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 22 லட்சம் யூனிட் மணல் திருடப்பட்டு, ரூ.4,730 கோடி மதிப்பில் மணல் கொள்ளை நடந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

“எதற்காக விஜயை தொட்டோம், எதற்காக விஜயுடன் இருந்த மக்களை தொட்டோம் என்று மக்கள் வருத்தப்படுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

தவெகவினரை ‘தற்குறிகள்’ அல்ல, ‘ஆச்சரியக்குறிகள்’ எனப் பட்டியலிட்டார். மேலும், தற்குறிகள் ஒன்றாக சேர்ந்து திமுக அரசியலுக்கு கேள்வி குறியாக்கத்தைக் கொடுக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த போதே திமுகவை “கூத்தாடி கட்சி” என விமர்சித்து வந்ததாகவும், 53 வருடமாக “கூத்தாடி” என்றே திமுக தொடர்ந்துவருகிறது என்றும் விஜய் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பணமோசடி வழக்கில் போலீசார் கைது செய்யவில்லை – சின்னத்திரை நடிகர் தினேஷ் விளக்கம்

பணமோசடி சம்பவத்தில் போலீசார் தன்னை கைது செய்யவில்லை என்று சின்னத்திரை நடிகர்...

உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில் நடத்தப்படுவதில் மகிழ்ச்சி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் தமிழகத்தில்...

வெள்ளி நகைகளுக்கு வரும் ஆர்வம்: தங்கத்தின் போல் வெள்ளியும் பிரகாசிக்குமா?

அண்மையில் வெள்ளி நகைகளில் மக்களின் ஆர்வம் பெரிதும் அதிகரித்துள்ளது. வெள்ளி நகை...

பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவா திமுக? – நயினார் நாகேந்திரன் கேள்வி

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாலியல் குற்றவாளிகளை திமுக...