துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14ல் வெளியாகிறது!
துல்கர் சல்மான் நடித்துள்ள புதிய படம் ‘காந்தா’ வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1950களின் மெட்ராஸ் மாகாணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த பீரியட் டிராமா படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படக்குழுவின் அறிவிப்பின்படி, ‘காந்தா’ வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனுடன் புதிய பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
துல்கர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘லோகா’ படம் பெற்ற பெரும் வெற்றியின் காரணமாக, ‘காந்தா’ வெளியீடு தாமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற ஆவணத் தொடரை இயக்கியவர் தான் ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ். தற்போது ‘காந்தா’ படம் தெலுங்கில் உருவாகி வருவதுடன், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.