‘ஷேக் ஹசீனா குற்றவாளி’ – வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அறிவிப்பு

Date:

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, வன்முறை வழக்கில் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2024 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட தாக்குதல், வன்முறை மற்றும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு நேரடியாக ஷேக் ஹசீனா பொறுப்பானவர் என்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. தன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களைத் துன்புறுத்தவும் கொல்லவும் உத்தரவிட்டது நிரூபணமாகியுள்ளது என நீதிபதி கூறினார்.

மாணவர்கள் நடத்திய பெருமளவு போராட்டத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகியிருந்தார். அதன் பின் நாட்டை விட்டு புறப்பட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத் தொடர்ந்து போராட்ட மாணவர் இயக்கத்தின் முன்முயற்சியில், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகம்மது யூனுஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பலரும் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கார்த்திகை தீபம்: திருவண்ணாமலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு பதில் அளிக்க ஐகோர்டு உத்தரவு

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான...

ஏகன் நடிக்கும் புதிய படம் – இரு ஹீரோயின்களுடன்

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ தொடரிலும், ‘ஜோ’, ‘கோழிப்பண்னை...

இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 2.2 மில்லியன் டன் எல்பிஜி வாங்க ஒப்பந்தம்

இந்தியா 2026-ல் அமெரிக்காவிடம் இருந்து 2.2 மில்லியன் டன் எல்பிஜி (LPG)...

டெல்லி கார் குண்டுவெடிப்பு – தற்கொலைப்படை தாக்குதல்: என்ஐஏ உறுதி

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு...