விஜய் – ராகுல் காந்தி சந்திப்பு விவகாரம்: செல்வப்பெருந்தகை விளக்கம்

Date:

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் தவெக தலைவர் விஜய் சந்தித்தாரா என்ற சர்ச்சைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பதிலளித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“சபரிமலை பக்தர்கள் இருமுடியை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் பாஜக இந்து மதத்துக்கு எதிரான கட்சி என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள். எஸ்ஐஆருக்கு எதிராக தவெக நடத்திய போராட்டத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

விஜய்–ராகுல் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டபோது அவர்,

“நான் தமிழக காங்கிரஸ் தலைவர். இந்த சந்திப்பு குறித்து எனக்குத் தகவல் எதுவும் இல்லை. உறுதிப்படுத்தப்படாத செய்திகளை சிலர் பரப்பி தங்களுக்குப் புகழ் தேடுகிறார்கள். நேற்று நான் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் கேட்டபோதும், அவருக்கும் இதுபற்றி தெரியவில்லை என்று கூறினார். வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மையற்றவை.

எங்கள் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவிப்பதே அதிகாரப்பூர்வமானது. கூட்டணிகள் குறித்து முடிவு செய்வது அகில இந்திய காங்கிரஸ் தலைமையே” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிவ தாண்டவத்தில் திளைக்கும் பாலகிருஷ்ணா

2021-இல் வெளிவந்து வெற்றி பெற்ற போயபதி ஸ்ரீனு இயக்கிய ‘அகண்டா’ படத்தில்,...

தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்கக் கூடாது: விக்கிரமராஜா அறிவுறுத்தல்

தமிழக அரசால் தடைக்கப்பட்ட பொருட்களை கடைகளில் விற்க வேண்டாம் என்று...

தேஜஸ்வி மீது சகோதரி ரோகிணி பரபரப்பு குற்றச்சாட்டு: லாலு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?

பிஹார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கடுமையான தோல்வியை...

நவம்பர் 19-ல் பிரதமர் மோடி கோவை வருகை: விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்

கோவையில் நவம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் இயற்கை வேளாண்...