ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்

Date:

சென்னை ரயில்வே கோட்டம், ‘ரயில் மதத்’ செயலியுடன் இணைந்து, ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயணிகள் உணவகங்கள் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யலாம்.

பயணிகள் உணவகங்களில் அதிக கட்டணம், சேவை குறைபாடு, உணவின் தரம் மற்றும் அளவு, தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காதது, சுகாதார நிலை போன்ற விவரங்களைச் சேகரித்து பதிவேற்ற முடியும்.

பயணிகள் ரயில் நிலைய உணவகங்களில் உள்ள க்யூஆர் கோட்டை தங்களது செல்போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதில், உணவகத்தின் இருப்பிடம், நிலையக் குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும். அதை உறுதிசெய்து, ‘ரயில் மதத்’ செயலியில் செல்போன் எண்ணை பதிவேற்றிக், புகாரை அனுப்பலாம். பிறகு, குறிப்பு எண்ணுடன் ஒரு ஒப்புகைச் சீட்டு ரயில் செயலியில் கிடைக்கும்.

அனுப்பப்பட்ட புகார்களை உடனுக்குடன் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கோடநாடு வழக்கு: விசாரணை டிசம்பர் 19-க்கு ஒத்திவைப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு...

ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும்...

தமிழ்நாடு டி20 அணியின் கேப்டனாக வருண் சக்ரவர்த்தி நியமனம்

சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் 26...

‘காந்தா’ விமர்சனம்: துல்கர் சல்மான் பிரகாசிக்கும் பீரியட் டிராமா – எவ்வளவு பட்டது?

துல்கர் சல்மான் எப்போதும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்வதில் தனித்தன்மை காட்டுபவர்....