நெல்லை மாவட்டத்தில் சீமான் தலைமையில் ‘கடலம்மா மாநாடு’ நவம்பர் 21-ஆம் தேதி

Date:

திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ‘கடலம்மா மாநாடு’ நவம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ‘ஆதி நீயே, ஆழித் தாயே’ என்ற முழக்கத்தின்கீழ், கட்சியின் மீனவர் பாசறை இந்த மாநாட்டை நடத்துகிறது.

இதற்கு முன் நவம்பர் 15ஆம் தேதி திருவையாற்றில் நடைபெறும் தண்ணீர் மாநாட்டை தொடர்ந்து, இந்த கடலம்மா மாநாடும் இயற்கை மற்றும் கடல்சார் பாதுகாப்பை முன்னிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடல்சார் உயிர் வளங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை மையமாகக் கொண்டு மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார். சீமானின் முந்தைய விழாக்கள், பேரணிகள் போல் இம்மாநாடும் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே அதிக ஆர்வத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த கோரி, சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகே நவம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்ஐஆரை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக – “இது வெட்கக்கேடு” : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில்...

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியம் – அதை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைவுசெய்யப்பட்ட...

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: டைபிரேக்கரில் தோல்வி – பிரக்ஞானந்தா வெளியேற்றம்

கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய...

“யார் முதல்வராக வரக்கூடாது என்பதை பிஹார் மக்கள் தெளிவாக கூறியுள்ளனர்” – தமிழக பாஜக

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இரண்டில் மூன்றாம்...