திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் திடீர் பணியிட மாற்றம்

Date:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வந்த கணக்காளர் விஜயன், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தக் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை துறையினர் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில், வருவாய் பதிவுகளில் சில குளறுபடிகள் இருப்பதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கோயில் நிலங்களில் அரசு சார்பில் நடைபெறும் திட்டப் பணிகளைப் பற்றியும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக கோயிலில் பணியாற்றி வந்த விஜயன், நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் பிரளயகாலேஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தணிக்கை ஆய்வுக்கு பிறகு கணக்காளர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது, திருக்கழுக்குன்றம் கோயில் நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“வாக்கு எண்ணிக்கையில் விதிமீறல் நடந்தால் அமைதியாக இருக்கமாட்டோம்!” — தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியலமைப்புக்கு விரோதமான நடவடிக்கைகள் நடந்தால்,...

“அமெரிக்காவுக்கு வந்து பயிற்சி அளித்துவிட்டு சொந்த நாட்டுக்குத் திரும்புங்கள்!” — ட்ரம்பின் புதிய H-1B விசா பிளான்

அமெரிக்க வேலைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை முழுமையாக நம்பும் பழக்கத்தை குறைத்து, அமெரிக்கர்களுக்கே...

உயிர்பலி வாங்கும் திருச்சி சஞ்சீவி நகர் சிக்னல் — சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல்!

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை எதிர்த்து, உடனடியாக...

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக போர் விமானம் — புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று (நவம்பர் 13) பிற்பகல் சிறிய...