எஸ்ஐஆர் ஆர்ப்பாட்டத்தை புறக்கணித்த காங்கிரஸ்! புதுக்கோட்டை திமுக கூட்டணியில் புழுக்கம்

Date:

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) கைவிட கோரி, தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விசிக, மதிமுக, தவாக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்ற நிலையில், தேசியக் கட்சியான காங்கிரஸ் சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், கூட்டணி கட்சியினரிடையே விமர்சனம் எழுந்துள்ளது.

இது குறித்து திமுக ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அறந்தாங்கி பி.செந்தில்வேலன் பேசியதாவது:

“ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என திமுக 2 தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தி அழைப்பு விடுத்தது. ஆனால், ஏனோ காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்தது திமுக தான் என்பதை அக்கட்சியினர் மறக்கக் கூடாது.”

இதற்கு பதிலாக, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:

“ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக எங்களுக்கு எந்த தகவலையும் திமுக தெரிவிக்கவில்லை. முறையான அழைப்பு இல்லாமல் கலந்துகொள்ள முடியாது. மேலும், புதுக்கோட்டை மாவட்ட அரசு விழாவில் முதல்வர் பங்கேற்ற போது கலந்துகொள்ளும் போது திமுக மூத்த நிர்வாகிகள் ‘காங்கிரஸ் பங்கேற்க வேண்டும்’ என்ற கட்டாயம் இல்லை என கூறினர்.”

எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக முன்னதாகவும் முன்னணி நடவடிக்கைகளை எடுத்த காங்கிரஸ், அதே எஸ்ஐஆருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்காமலிருந்தது, திமுக கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை – சென்னையில் சோக சம்பவம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை – சென்னையில்...

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு வடமாநிலங்களில் புனித நீராடல் – நீர்நிலைகளில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு வடமாநிலங்களில் புனித நீராடல் –...

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் – தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் – தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர் ஈரானில்...

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் : சீமான் அதிரடி அறிக்கை

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம் :...