எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு போட்ட ஒரே கட்சி அதிமுக! பாஜகவின் சதியில் எடப்பாடி பங்கெடுத்துள்ளார் – அமைச்சர் ரகுபதி விமர்சனம்

Date:

எஸ்ஐஆர் (SIER) நடவடிக்கையை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக தான் எனவும், வாக்குரிமையை பறிக்கும் பாஜக சதியில் எடப்பாடி பழனிசாமி துணைபோகிறார் எனவும் மாநில சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“தேர்தல்களில் முறைகேடுகள் இல்லாமல் நடத்துவது முக்கியம் என்பதை திமுக எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிய நிலையில் அவசரமாக எஸ்ஐஆர் பணியை மேற்கொள்வது உள்நோக்கமுள்ளதாகத் தெரிகிறது.

பாஜக எதிரான வாக்காளர்களை நீக்கி வாக்குரிமையை பறிக்க முயலும் சதிக்கு எதிராக திமுக அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. மேலும், எஸ்ஐஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது,” என ரகுபதி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

“பாஜகவுக்கே துணை போகும் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவிலேயே எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு தாக்கல் செய்த ஒரே கட்சி அதிமுக என்ற வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்.

பாஜகவோ வழக்குப் போடவில்லை; ஆனால் அதிமுக, பாஜக கிளை அமைப்பாக செயல்பட்டு நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.

தேர்தலில் தோல்வி நிச்சயம் எனத் தெரிந்த எடப்பாடி, எஸ்ஐஆர் மூலம் வெற்றி பெறலாம் என பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ளார். கூவத்தூரில் முதல்வராக ஆனது போலவே, எஸ்ஐஆர் மூலம் ‘கொள்ளைப்புற முதல்வராக’ வர நினைக்கிறார்.

முஸ்லிம்களைப் பாதிக்கும் சிஏஏ சட்டத்தை ஆதரித்த அதிமுக தலைவர் பழனிசாமி, இப்போது அதே சட்டத்தை எஸ்ஐஆர் மூலம் அமல்படுத்த முயலும் பாஜக சதியில் பங்கெடுத்துள்ளார். இதனால் தமிழர்களின் வாக்குரிமை மட்டுமல்ல, குடியுரிமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது,” என ரகுபதி குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் கூறினார்:

“வேளாண் சட்டம், உதய் மின் திட்டம், அரிட்டாப்பட்டி சுரங்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் என பாஜக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் அதிமுக ஆதரித்தது. பிஹார், ஆந்திரா மாநிலங்களில் பாஜக கூட்டணி கட்சிகள் எஸ்ஐஆரை ஆதரிக்கவில்லை. ஆனால் பழனிசாமி மட்டும் ‘ராஜ விசுவாசம்’ காட்டி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தை டெல்லியின் அடிமையாக மாற்ற எடப்பாடி முயற்சிக்கிறார். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்,” என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...