வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

Date:

வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி வழக்கு: செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி நேற்று (நவம்பர் 7) சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் மொத்தம் 3 வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளில் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து 2,222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்குகள் தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையில், செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். இதனை பதிவுசெய்த நீதிபதி, மேலும் 50 பேருக்கு புதிதாக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 12-க்கு தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் –...

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம்...

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! ஹாங்காங் நகரில் நடைபெற்று...

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம்

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம் துல்கர் சல்மான், பாக்ய போர்சே,...