எஸ்ஐஆர் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள்: திமுக தலைமையகத்தில் சிறப்பு உதவி மையம்

Date:

எஸ்ஐஆர் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள்: திமுக தலைமையகத்தில் சிறப்பு உதவி மையம்

திமுக சட்டத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எஸ்ஐஆர் (சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்) பணிகள் தொடர்பான பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் அமல்படுத்தி வருகிறது. இதற்கிடையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதே நேரத்தில், எஸ்ஐஆர் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மையத்திற்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 627 அழைப்புகள் வந்துள்ளன. பொதுமக்கள் முன்வைத்த கேள்விகள்:

  • 2002-ம் ஆண்டு வாக்களித்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு குடியேறினால் வாக்குரிமை எங்கு அமையும்?
  • படிவத்தில் உறவினர் விவரங்களை கட்டாயமாக நிரப்ப வேண்டுமா?
  • 2024 வாக்காளர் பட்டியலில் பெயர் மறைந்துள்ளது, சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
  • வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவருக்கு படிவத்தை எப்படி பூர்த்தி செய்ய முடியும்?
  • பிஎல்ஓ அலுவலர்கள் உதவி செய்யவில்லை என்ற பிரச்சினை போன்றவை.

இந்த சந்தேகங்களை தீர்க்க திமுக சட்டத்துறை சார்பில் நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் – திமுக கூட்டணிக் கட்சிகள் தீர்மானம்

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவம்பர் 11-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் –...

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம் ஒப்படைப்பு

கரூர் துயரம்: தவெக பிரச்சார வாகன சிசிடிவி பதிவு, ஆவணங்கள் சிபிஐ-யிடம்...

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!

ஹாங்காங் சிக்ஸ்: டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா! ஹாங்காங் நகரில் நடைபெற்று...

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம்

‘காந்தா’ – 1950களின் பின்னணியில் உருவான படம் துல்கர் சல்மான், பாக்ய போர்சே,...