“தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் சொல்வாரா?” – ஹெச். ராஜா கேள்வி

Date:

“தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் சொல்வாரா?” – ஹெச். ராஜா கேள்வி

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்:

தேர்தல் ஆணைய விதிமுறைகளைப் பின்பற்ற மாட்டேன் என்று முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் சொல்லத் துணிவாரா?”

சிவகங்கையில் உள்ள வேலுநாச்சியார் மணிமண்டபத்தில், ‘வந்தே மாதரம்’ பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று நடைபெற்ற விழாவில் சுதேசி பொருட்களை வாங்குவோம் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தலைமையேற்றார். மூத்த தலைவர் ஹெச். ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா கூறினார்:

“பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ‘இந்தியா’ கூட்டணிக்கு பொய்யும் பித்தலாட்டம்தான் மூலதனம்.

தமிழ்நாட்டை தலைநிமிர விடமாட்டோம் என்ற போக்கில் ஸ்டாலின் செயல்படுகிறார்.

அமலாக்கத் துறை, தேர்தல் ஆணையம் போலவே தன்னாட்சி அமைப்பாகும்; அதற்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை. ஊழல் செய்தவர்கள்மீது மட்டுமே அது நடவடிக்கை எடுக்கிறது.”

அவர் மேலும் கூறினார்:

“கட்சியை பதிவு செய்யும் போது, தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுவோம் என்று உறுதி அளிக்கப்படுகிறது. அந்த விதிகளை மீறினால் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதற்குள், முதல்வர் ஸ்டாலின் அதனை பின்பற்ற மாட்டேன் என்று சொல்லும் தைரியம் கொண்டவரா?

ஆர்.கே. நகரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது போலி வாக்காளர்கள் இருப்பதாக நீதிமன்றம் சென்றவர் ஸ்டாலின்தான்; இப்போது அதனை நீக்கக் கூடாதா?”

மேலும் ஆர். ராஜா தெரிவித்தார்:

ஆ. ராஜா ஊழலுக்கே சிறப்பு பட்டம் பெற்றவர். 5ஜி வந்தாலும், அவரின் 2ஜி மறக்கப்படாது,” எனக் கடுமையாக விமர்சித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பகவத் கீதை மதப் புத்தகம் அல்ல” – பாரத நாகரீகத்தின் தத்துவ நூல் என உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

“பகவத் கீதை மதப் புத்தகம் அல்ல” – பாரத நாகரீகத்தின் தத்துவ...

வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு

வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசு டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட...

புதுச்சேரி அரசு நிலத்தில் லெனின் சிலை : இந்து முன்னணி – பாஜக எதிர்ப்பு, பரபரப்பு

புதுச்சேரியில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி லெனின் சிலை நிறுவப்பட்டதற்கு, இந்து...