சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம் – பாஜக அறிவிப்பு

Date:

சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: பிரதமர் தலையிடக் கோரி 1 கோடி கையெழுத்து இயக்கம் – பாஜக அறிவிப்பு

சபரிமலை கோயில் தங்கம் திருட்டு விவகாரத்தில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்பதற்காக, 1 கோடி மக்களிடமிருந்து கையெழுத்து பெறும் பிரச்சாரம் தொடங்கப்படவுள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

“சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டில், மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் ஏகேஜி மையத்துடன் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கம் திருடப்பட்ட நிகழ்வு ஒரே நபரின் செயல் மட்டுமல்ல; இதில் சர்வதேச அளவிலான முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்றும் கேரள உயர்நீதிமன்றமே தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் பெரிய அளவில் சதி இடம்பெற்றுள்ளது. திருவாங்கூர் தேவசம் வாரியத்தின் சில அதிகாரிகள் மட்டுமல்லாது, அரசுத் தலையீடும் இதில் உள்ளதாக தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியால் நியமிக்கப்பட்ட முன்னாள் ஆணையர் பாதுகாக்கப்படுகிறார். அவரை கைது செய்யாமல் முக்கிய குற்றவாளிகளை பாதுகாக்க முயற்சி நடக்கிறது.

வழக்கை தற்போது விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு மாநில அரசின் கீழ் செயல்படுகிறது. எனவே இது தொடர்பாக சிபிஐ விசாரணை அவசியம் தேவை. சபரிமலை கோயிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும்,” எனவும், இதற்காக ஒரு கோடி பேரிடமிருந்து கையெழுத்து பெற்று பிரதமரிடம் மனு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய்!” – பயிற்சியாளர் கடும் சாடல்

“ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய்!” –...

திண்டுக்கல் டாஸ்மாக் வருமானம் ரூ.1.16 கோடி நீதிமன்ற கணக்கில் – இழப்பீடு வழக்கில் ஐகோர்ட் அதிரடி

திண்டுக்கல் டாஸ்மாக் வருமானம் ரூ.1.16 கோடி நீதிமன்ற கணக்கில் – இழப்பீடு...

நாயகன்’ ரீரிலீஸுக்கு தடை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

‘நாயகன்’ ரீரிலீஸுக்கு தடை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு மணிரத்னம்...

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்திற்கு விற்பனை

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்திற்கு...