நீதிமன்றத்தை அவதூறாக பேசியது: சீமான் மீது வழக்குப் பதிவு
நீதித்துறையை அவதூறாக பேசியதாகும் புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
2024 நவம்பரில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சீமான் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசுக்கு உத்தரவிட்டார்.
அந்த உத்தரவினைத் தொடர்ந்து, திருமங்கலம் போலீஸார் சீமான் மீது பிஎன்எஸ் பிரிவு 196 உட்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.