சீருடை பணியாளர் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு – 34 ஆண்டுகால பிரச்சினைக்கு முடிவு

Date:

சீருடை பணியாளர் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எஸ்.ஐ பதவி உயர்வு – 34 ஆண்டுகால பிரச்சினைக்கு முடிவு

தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அரசாணை: ‘சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வழங்கும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு எஸ்.ஐ பதவி உயர்வு வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல் துறையில், காவல் பணியிடங்கள் சீருடை பணியாளர் தேர்வு வாரியம், அரசு மற்றும் மத்திய தேர்வாணையங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. நேரடி எஸ்.ஐ தேர்வு 1991 முதல் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது.

முந்தைய நடைமுறையில், காவலர் பயிற்சி கல்லூரியில் வழங்கப்படும் மதிப்பெண்களில் சில நேரங்களில் பாரபட்சம் ஏற்படும் சந்தேகம் இருந்தது. இதனால் பதவி உயர்வு பணிமூப்பில் குழப்பங்கள் உருவாகி வந்தன.

இதுபற்றி விசாரித்த உச்ச நீதிமன்றம், 1996–2024 காலத்துக்கான உதவி ஆய்வாளர்களின் பதவி உயர்வுக்கும் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வழங்கும் மதிப்பெண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கடந்த மே மாதம் உத்தரவிட்டது. தமிழக அரசு தாக்கிய சீராய்வு மனுவும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதன்படி, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை மூலம், இனி எஸ்.ஐ பதவி உயர்வில் எந்த குழப்பமும் இல்லாமல், மதிப்பெண்களின் அடிப்படையில் பதவி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும். இது 34 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது அதிமுக – பாஜக கூட்டணிக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது ஒரு சிக்கலான அரசியல் கணக்கு இதோ…?

ஓ.பன்னீர்செல்வம் (OPS) திமுகவில் இணைந்தது அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமா...

“ஓ.பன்னீர்செல்வம் திமுகவில்: அரசியல் திருப்பமா? அதிகாரப் பரவலா?” விரிவான தகவல்

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில்: அரசியல் திருப்பமா? அதிகாரப் பரவலா? பிப்ரவரி 27, 2026 -...

செயல்பாட்டில் இல்லாத சேவை மையங்கள்: வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவினர் மிரட்டல்!

செயல்பாட்டில் இல்லாத சேவை மையங்கள்: வீடியோ வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு திமுகவினர் மிரட்டல்! கடலூர்...

“1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?” – அறநிலையத் துறைக்கு எதிராக இந்து முன்னணி போர்க்கொடி!

"1500 ஆண்டுகள் பழமையான கோயிலைப் புறக்கணிப்பதா?" - அறநிலையத் துறைக்கு எதிராக...