ரூ.700 கோடி வசூலை கடந்த ‘காந்தாரா: சாப்டர் 1’
உலகம் முழுவதும் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் ரூ.700 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, நாயகனாக நடித்த இப்படம் ஆரம்பத்தில் மிதமான வசூலைப் பெற்றிருந்தாலும், வெளியான சில நாட்களுக்குள் பாராட்டுகள் அதிகரிக்க, வசூலும் வேகமெடுத்தது. இதனால் படக்குழு உற்சாகமடைந்தது.
தற்போது, உலகளவில் மொத்த வசூல் ரூ.700 கோடியை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.68.5 கோடி வருமானத்தைப் பெற்று, பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வெளியீட்டு படங்களின் நடுவிலும், ‘காந்தாரா: சாப்டர் 1’ பல திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.
ரிஷப் ஷெட்டி இயக்கிய இப்படத்தில் ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹோம்பாளே நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்துக்கு இசையமைப்பை அஜனீஷ் லோக்நாத் மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை அரவிந்த் காஷ்யப் செய்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை பங்கலான் கவனித்துள்ளார்.