“ஆப்கானிஸ்தானை பயன்படுத்தி இந்தியா மறைமுகப் போரில் ஈடுபடுகிறது” — பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றச்சாட்டு

Date:

“ஆப்கானிஸ்தானை பயன்படுத்தி இந்தியா மறைமுகப் போரில் ஈடுபடுகிறது” — பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குற்றச்சாட்டு

இந்தியா, பாகிஸ்தானை கிழக்கிலும் மேற்கிலும் நெருக்கடியில் வைத்திருக்க முயற்சி செய்கிறது என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது:

“ஆப்கானிஸ்தான் இந்தியாவின் செல்வாக்கில் உள்ளது. பின்னால் இருந்து பொம்மைகளை இயக்குவது போல் ஆப்கானிஸ்தானை இந்தியா இயக்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சொல்லும் படி ஆப்கானிஸ்தான் செயல்படுகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தானை மூலமாக பாகிஸ்தான் மீது பினாமி போரை நடத்துகிறது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.”

அவர் மேலும் கூறினார்:

“பாகிஸ்தான் எல்லையின் கிழக்கும் மேற்கும் பதற்றம் உண்டாக்க விரும்புகிறது இந்தியா. இருப்பினும் கத்தார், துருக்கி ஆகிய நாடுகளின் தலையீட்டால் ஆப்கானிஸ்தான் — பாகிஸ்தான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டியது அவசியம் என்று பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள், அரசு, மக்கள் அனைவரும் ஒருமித்துக் கருதுகிறார்கள்.”

கடந்த அக்டோபர் 9-இல் காபூலில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்று ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு குற்றம்சாட்டியது. இதற்கு பாகிஸ்தான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. அதேசமயம் தலிபான் ஆதரிக்கும் TTP அமைப்புக்கு எதிராக பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தலிபான் பதிலடி நடத்தியது மற்றும் எல்லை பகுதிகளில் பதட்டம் உருவானது.

கத்தார், துருக்கி நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர ஒப்புக்கொண்டன. தற்போது இந்தியா மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பாகிஸ்தான் அமைச்சர், அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை என்பது கவனத்திற்குரியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அரசு வேலை கிடைத்துவிட்டது” – கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை கண்டனம்!

"அரசு வேலை கிடைத்துவிட்டது" - கெத்து காட்டிய பயிற்சி காவலர்களுக்குக் காவல்துறை...

இணையத்தை ஆளும் ‘பஞ்ச்’ குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன் சர்ப்ரைஸ்!

இணையத்தை ஆளும் 'பஞ்ச்' குரங்கு குட்டி: கூகுள் வெளியிட்ட க்யூட் அனிமேஷன்...

மதுரையில் ரசிகர்களுடன் “தாய் கிழவி” படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு!

மதுரையில் ரசிகர்களுடன் "தாய் கிழவி" படம் பார்த்த படக்குழுவினர்: உற்சாக வரவேற்பு! மதுரை:...

ஈரான் மீது இஸ்ரேல் நேரடித் தாக்குதல்: அமெரிக்காவின் நேரடித் தலையீடு… சர்வதேச மற்றும் பிராந்திய தாக்கம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று...