வாக்காளர்களை நோக்கி திட்டமிட்டு எஸ்ஐஆர் நடைமுறை கொண்டுவரப்படுகிறது: எம்.பி. ஜோதிமணி

Date:

வாக்காளர்களை நோக்கி திட்டமிட்டு எஸ்ஐஆர் நடைமுறை கொண்டுவரப்படுகிறது: எம்.பி. ஜோதிமணி

கரூர் எம்.பி. ஜோதிமணி கூறுகையில்:

தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) திணிக்கப்படுகின்றது. இதை “இந்தியா” கூட்டணி கண்டிக்கிறது.

முன்பெல்லாம் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரை நீக்குவது, புதிய பெயர்களை சேர்ப்பது போன்ற சாதாரண திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால் இப்போது வழங்கப்பட்ட புதிய படிவத்தில் 2002 ஆண்டிலிருந்த வாக்காளர் விவரங்கள், உறவினர் விவரங்கள், அடையாள எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் கேட்கப்படுகின்றன.

2002-ல் இருந்த உறவினர்கள் இப்போது உயிருடன் இல்லையெனில் அவர்களின் இறப்பு சான்றிதழை கூட சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பலரிடம் அந்தச் சான்றிதழ்கள் இருக்க வாய்ப்பில்லை. இந்த படிவங்களை முழுமையாக நிரப்ப முடியாவிட்டால் வாக்காளர்களை நீக்கப்படும் அபாயம் உள்ளது.

பிஹாரில் இந்த நடைமுறை மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அவர் கூறினார். இதனை தேர்தல் ஆணையம் செய்ய கூடாது; குடியுரிமை சரிபார்ப்பது உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்தினார்.

வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்ஐஆர் செயல்படுத்தப்படுகிறது; அதனால் இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் கூட்டம் நடத்தியதாகவும் தேர்தல் ஆணையம் பாஜகக்காக செயல்படுகிறது என்றும் ஜோதிமணி குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு திருப்பரங்குன்றம் தீபத்தூண்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர்...

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மது, மாது, ஊழல் –...

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ பதில் அதிர்ச்சி

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ...