கோயில்கள், மடங்களின் நிதி–சொத்துகள் தொடர்பான உத்தரவுகளை இணையத்தில் வெளியிட வழக்கு

Date:

கோயில்கள், மடங்களின் நிதி–சொத்துகள் தொடர்பான உத்தரவுகளை இணையத்தில் வெளியிட வழக்கு

கோயில்கள் மற்றும் மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அரசாணைகள், டெண்டர் அறிவிப்புகள் மற்றும் அனுமதி உத்தரவுகளை அறநிலையத் துறை இணையதளத்தில் உடனுக்குடன் வெளியிட வேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை மயிலாப்பூர் ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர். ரமேஷ் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில் கூறப்பட்டதாவது:

> “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசுத் துறைகள் வெளியிடும் அரசாணைகள், டெண்டர் அறிவிப்புகள், அனுமதி உத்தரவுகள் அனைத்தும் பொதுமக்கள் அறியும் வகையில் இணையத்தில் பதிவேற்றப்பட வேண்டும். ஆனால், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த புதிய தகவலும் பதிவேற்றப்படவில்லை.

அறநிலையத் துறையின் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் ஆணையர் வசம் உள்ள பொதுநல நிதி குறித்து எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை. எனவே, கோயில்கள், மடங்கள், இந்து மத கட்டளைகளின் நிதி மற்றும் சொத்துகள் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் இணையத்தில் வெளிப்படையாக வெளியிட வேண்டும். அதுவரை டெண்டர் பணிகளை இறுதி செய்ய தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என மனுதாரர் கோரினார்.

இந்த மனுவை நீதிபதி வி. லட்சுமி நாராயணன் விசாரித்தார்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி. ஜெகந்நாதன்,
அறநிலையத் துறை சார்பில் வழக்கறிஞர் எஸ். ரவிச்சந்திரன்,
மாநில தகவல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் விக்னேஸ்வரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

விசாரணை முடிவில், நீதிமன்றம் தமிழக அரசு மற்றும் அறநிலையத் துறை இரண்டும் பதில் அளிக்க உத்தரவிட்டது.
வழக்கு அடுத்ததாக அக்டோபர் 29-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிமன்றத்தை அவதூறாக பேசியது: சீமான் மீது வழக்குப் பதிவு

நீதிமன்றத்தை அவதூறாக பேசியது: சீமான் மீது வழக்குப் பதிவு நீதித்துறையை அவதூறாக பேசியதாகும்...

யாவரும் நலம்’ விக்ரம் கே.குமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா

‘யாவரும் நலம்’ விக்ரம் கே.குமார் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ‘யாவரும் நலம்’, ‘24’...

சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னை, புறநகரில் கொட்டும் மழையிலும் களைகட்டிய தீபாவளி விற்பனை! சென்னை மற்றும் புறநகர்...

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் மீது ஜார்க்கண்ட் வெற்றி

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் மீது...