“மழை வெள்ளத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேவையா?” — மதுரையில் கூட்டம் விட்டு வெளிநடப்பு

Date:

“மழை வெள்ளத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேவையா?” — மதுரையில் கூட்டம் விட்டு வெளிநடப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது மழை வெள்ளம் நிலவுகிறது; இந்நிலையில் பட்டியல் திருத்தம் அவசியமா என எதிர்த்து காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர், “நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடுதோறும் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும். குடிமக்கள் அதை நிரப்பி ஜனவரி 31க்குள் திருப்பி அளிக்க வேண்டும். இது புதிய வாக்காளர்களை சேர்க்கவும், இறந்தவர்கள் மற்றும் வேறு இடத்துக்கு மாற்றியவர்கள் பெயர்களை நீக்கவும் உதவும். பீகாரில் இந்த நடைமுறை வெற்றிகரமாக நடந்தது” என்று கூறினார்.

அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று கட்சிகள் கூட்டத்திலிருந்து வெளியேறின.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கணேசன், “பீகாரில் நடந்த கணக்கெடுப்பில் பல முறைகேடுகள் நடந்தன. மழை நிலவரத்தில் இப்படிச் செய்தல் சரியல்ல” என்று தெரிவித்தார்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ அண்ணாத்துரை, “தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை அதிமுக வரவேற்கிறது. தமிழகத்தில் பல போலி வாக்காளர்கள் உள்ளனர். அதிகாரிகளல்லாத நபர்கள் விண்ணப்பம் பெறக்கூடாது; தேர்தல் அலுவலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்” என்றார்.

திமுகவின் தேவசேனன், “2002, 2005 கணக்கெடுப்புகளின் அடிப்படையில் ஒப்பீடு செய்யப்படுகிறது என்றால், அந்த காலத்தில் எந்த தாய் வாக்காளர் பட்டியல் பயன்படுத்தப்பட்டது?” என்று கேட்டார்.

இதற்கு ஆட்சியர், “அது குறித்து ஆய்வு செய்து தெரிவிக்கிறேன். தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது” என்று விளக்கம் அளித்தார்.

பாஜக பிரதிநிதி, “போலி வாக்காளர்களை நீக்குவதே முக்கிய இலக்கு; இந்த முயற்சிக்கு ஆதரவு,” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை பிரம்மோற்சவத்துக்கு 60 டன் மலர் அலங்காரம் – ரூ.3.5 கோடி செலவு

திருமலை பிரம்மோற்சவத்துக்கு 60 டன் மலர் அலங்காரம் – ரூ.3.5 கோடி...

மதுரையின் சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண கட்சி தொடங்கிய சங்கரபாண்டியன்!

மதுரையின் சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண கட்சி தொடங்கிய சங்கரபாண்டியன்! அரசியலை பலர்...

தேர்தல் முன் எஸ்ஐஆர் எதிர்ப்பு கூட்டம் – திமுகவின் நாடகம்” : தவெக தலைவர் விஜய் விமர்சனம்

“தேர்தல் முன் எஸ்ஐஆர் எதிர்ப்பு கூட்டம் – திமுகவின் நாடகம்” :...

வாஷி கலக்கம்: 3-வது டி20யில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா

வாஷி கலக்கம்: 3-வது டி20யில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது...