சென்னையில் செல்லப்பிராணி உரிமம் கட்டாயம்: விதிமீறினால் ரூ.5,000 அபராதம்

Date:

சென்னையில் செல்லப்பிராணி உரிமம் கட்டாயம்: விதிமீறினால் ரூ.5,000 அபராதம்

சென்னை நகரில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு மாநகராட்சியிடம் இருந்து உரிமம் பெறுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று மேயர் ஆர். பிரியா தலைமையிலான மாநகராட்சி பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. துணை மேயர் மு. மகேஷ்குமார் மற்றும் ஆணையர் ஜே. குமரகுருபரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது அதிமுக கவுன்சிலர் கே.பி.கே. சதீஷ், “நெம்மேலி குடிநீர் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கினார்” என கூறினார். இதற்கு பதிலாக திமுக உறுப்பினர்கள், “திமுக ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது” என மறுப்புத் தெரிவித்ததால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சதீஷின் மைக் அணைக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் வெளியேறிச் சென்றனர்.

தொடர்ந்து, நகரில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் எனவும், நவம்பர் 24ஆம் தேதி முதல் வீடு வீடாக ஆய்வு செய்து உரிமம் பெறாதவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. பொது இடங்களில் நாய்களை கழுத்துப்பட்டி இன்றி அழைத்துச் செல்கிற உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அபராதங்களை சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்களால் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ரூ.5.19 கோடி செலவில் 2 லட்சம் நாய்களுக்கு மைக்ரோசிப் பொருத்தும் பணி தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. சிப் தரவு சேகரிப்பு சாதனங்கள் மற்றும் மென்பொருள் பராமரிப்பும் இதில் அடங்கும்.

அதேபோல், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 29,455 பேருக்கு 3 ஆண்டுகள் தினமும் 3 வேளை உணவு வழங்க ரூ.186.94 கோடி செலவில் ஒப்பந்தம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மயிலாப்பூர் மந்தைவெளி பகுதியில் உள்ள கிழக்கு வட்டச் சாலைக்கு ‘சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ என பெயரிடுவதற்கும் அனுமதி கிடைத்தது.

மொத்தம் 72 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

என்டிஏ தேர்தல் அறிக்கை நிகழ்வில் நிதிஷ் பேச அனுமதிக்கவில்லை – காங்கிரஸ் குற்றச்சாட்டு

என்டிஏ தேர்தல் அறிக்கை நிகழ்வில் நிதிஷ் பேச அனுமதிக்கவில்லை – காங்கிரஸ்...

33 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

33 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனை –...

சென்னையில் ஃபோர்டு மீண்டும்! – 600 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் ஃபோர்டு மீண்டும்! – 600 பேருக்கு வேலைவாய்ப்பு, முதல்வர் ஸ்டாலின்...

இந்திய மகளிர் அணிக்கு ஜி.கே. வாசன் வாழ்த்து

இந்திய மகளிர் அணிக்கு ஜி.கே. வாசன் வாழ்த்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி...