கரூர் விபத்து: காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை
கரூரில் செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக பிரச்சாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிகழ்வைத் தொடர்ந்து, சிபிஐ குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ந. ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், முக்கிய ஆவணங்களுடன் கரூர் சுற்றுலா மாளிகையில் உள்ள சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆஜரானார். அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றதாக தகவல்.