தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா — பரபரப்பு

Date:

தேவர் நினைவிடத்தில் ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா — பரபரப்பு

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்த வந்தார். அப்போது நினைவிட நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள், “மரியாதை செலுத்திவிட்டு விரைவில் வெளியேறவும்” எனக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

விவாதத்தின் போது கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், நினைவிட நிர்வாகியான அழகுராஜாவை திடீரென கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த சூழல் பதற்றமாக மாறியது.

பின்னர், நினைவிட நிர்வாகிகள் மற்றும் பூசாரிகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி, தேவர் சிலை அருகே அமர்ந்து ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா செய்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவரை சமாதானப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பெருமாள் முருகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட ‘அங்கம்மாள்’ திரைப்படம்

பெருமாள் முருகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட ‘அங்கம்மாள்’ திரைப்படம் தமிழ் இலக்கிய உலகின்...

தீபாவளி ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டு பூம்: ரூ.50,000-க்கு மேல் செலவு செய்தோர் அதிகரிப்பு

தீபாவளி ஷாப்பிங்கில் கிரெடிட் கார்டு பூம்: ரூ.50,000-க்கு மேல் செலவு செய்தோர்...

முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு தடை செய்தார் – பிரதமர் மோடி

முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க படேல் விரும்பினார், ஆனால் நேரு தடை...

இந்தியாவில் உருவான புதிய தலைமுறை இதய ஸ்டென்டுக்கு உலகத்தர அங்கீகாரம்

இந்தியாவில் உருவான புதிய தலைமுறை இதய ஸ்டென்டுக்கு உலகத்தர அங்கீகாரம் அமெரிக்காவின் சான்...