பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனை – புதன்கிழமை தொடக்கமா?

Date:

பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனை – புதன்கிழமை தொடக்கமா?

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பான மற்றும் எளிய முறையில் செய்ய, பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தும் வசதி இந்தப் புதன்கிழமையே அறிமுகமாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நொடி நேரத்திலேயே பண பரிவர்த்தனை செய்ய உதவும் யுபிஐ முறையை பொதுமக்களிருந்து பெரிய வணிகர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். நகரம் முதல் கிராமம் வரை பரவலாக பயன்படுத்தப்படும் இந்த சேவையால், ரொக்கப் பணத்தின் தேவை கணிசமாக குறைந்துள்ளது.

கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM போன்ற செயலிகளின் மூலம் தினசரி கோடிக்கணக்கான யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இதன் பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் எளிமைப்படுத்த அரசு, தன்னிடம் உள்ள பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்தி புதிய அங்கீகார முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, விரல் ரேகை (Fingerprint) மற்றும் முகத் தன்மை அறிதல் (Facial Recognition) மூலம் பயனர்கள் இனி யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

இப்போது யுபிஐ பரிவர்த்தனை செய்ய பின் நம்பரை உள்ளிட வேண்டும். ஆனால் பயோமெட்ரிக் முறை அறிமுகமானால், இன்னும் வேகமாகவும் சுலபமாகவும் பரிவர்த்தனை முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

என் நடவடிக்கைகள் தனிப்பட்டவை, ஆனால் வெற்றி உறுதி: சசிகலா

என் நடவடிக்கைகள் தனிப்பட்டவை, ஆனால் வெற்றி உறுதி: சசிகலா அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர்...

70 நாட்கள் தேங்கிய மழைநீர் அகற்றம்: 5 மணி நேரம் நேரில் கண்காணித்த கும்பகோணம் எம்.எல்.ஏ.

70 நாட்கள் தேங்கிய மழைநீர் அகற்றம்: 5 மணி நேரம் நேரில்...

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் ஸ்ரீவள்ளி, சகஜா 2-வது சுற்றுக்குள்

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ்: இந்திய வீராங்கனைகள் ஸ்ரீவள்ளி, சகஜா 2-வது...

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்படும் அவலம்

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் சேதப்படுத்தப்படும் அவலம் இலங்கை அதிகாரிகள் கைப்பற்றி...