தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!
சென்னை:
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதால், பொதுமக்கள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்பி முன்கூட்டியே சிலிண்டர் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
தடையற்ற விநியோகம் உறுதி
இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களின் தமிழக மற்றும் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விநியோகம் எவ்வித தடையுமின்றி, மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன.
போதிய கையிருப்பு
இந்தியன் ஆயில் (IOC) உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் போதுமான அளவில் கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. இதனால், வழக்கமான சுழற்சி முறையில் (Regular Cycle) வாடிக்கையாளர்களுக்குச் சிலிண்டர்களை விநியோகிப்பதில் எந்தவிதச் சிரமமும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
சமீபகாலமாக நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பொய்யான தகவல்களை நம்பி, அவசியமின்றி முன்கூட்டியே சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் என வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முறையான சுழற்சி முறையில் சிலிண்டர் விநியோகம் சீராக நடைபெறுவதை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




