சீமானுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
புதுடெல்லி:
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக, சீமான் மீது ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து வருண்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து சீமான் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். உயர் நீதிமன்றத்தின் ரத்து ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்த வழக்கினால், சீமானுக்கு மீண்டும் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.




