கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே. பாலு இன்று சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளூர் அரசியல் நிலவரம் குறித்துப் பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், “திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் (MLA) இப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களை மிரட்டி, கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறிப்பதாக” பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய அச்சுறுத்தல்களால் தொழில்துறையினர் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகத் தெரிவித்த அவர், தான் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ மீது பாமக வேட்பாளர் சுமத்தியுள்ள இந்தப் புகார் அப்பகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





