தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கான 23 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தமிழகத்தில் 166 மற்றும் புதுச்சேரியில் 2 என மொத்தம் 168 வாக்குச் சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 143 பேர் போட்டியிட்ட இந்தத் தேர்தலில், முதன்முறையாக க்யூ-ஆர் (QR) கோடு முறையில் வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு நவீன முறையில் தேர்தல் நடத்தப்பட்டது சிறப்பம்சமாகும்.
இந்தத் தேர்தலில் வழக்கறிஞர்களான பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ஒட்டுமொத்தமாக 81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





