பிரதமர் மோடியுடன் யூசுப் அலி சந்திப்பு: உணவுப் பொருள் வினியோகம் குறித்து முக்கியக் கலந்துரையாடல்!
லூலூ (LuLu) குழுமத்தின் தலைவர் யூசுப் அலி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முக்கியக் கலந்துரையாடல்களை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வளைகுடா நாடுகளுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்தியா மேற்கொண்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளுக்காகப் பிரதமர் மோடிக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் உணவுப் பொருள் வினியோகச் சங்கிலியை வலுப்படுத்த லூலூ குழுமம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்துப் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருதரப்பு உறவுகள் மற்றும் உணவுப் பாதுகாப்பு சார்ந்த இந்தச் சந்திப்பு தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.










