மானாமதுரையில் அதிர்ச்சி: “ஓரமாக நில்லுங்கள்” எனக் கூறியவருக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபருக்குப் போலீஸ் வலைவீச்சு!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சாலையில் ஓரமாக நில்லுங்கள் எனக் கூறிய நபரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் நடுவே பழனி என்பவர் நின்றுகொண்டிருந்தார். போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த அவரை ஓரமாக நிற்குமாறு கார்த்திகேயன் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பழனி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கார்த்திகேயனை சரமாரியாக வெட்டியுள்ளார். காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய பழனியைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.