“தமிழகத்தில் நடப்பது காட்டு தர்பார் ஆட்சி” – திருமாவளவன் மற்றும் ஜோதிமணிக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!
பாஜக எந்தவொரு கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அந்த கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மணப்பாறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பீகார் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறுவதை ஏற்க முடியாது என்றும், தேர்தலில் எந்தக் கட்சி எந்த இடத்தைப் பிடிக்கும் என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஒரு “காட்டு தர்பார்” ஆட்சி என்று விமர்சித்த அவர், இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.