லால்குடி நகராட்சி கூட்டம்: முறைகேடு புகார்களால் அதிமுக கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதம் – பரபரப்பு
திருச்சி: லால்குடி நகராட்சி மன்றக் கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் குறித்து அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதித்தனர். அப்போது, பொது நிதி ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் குற்றம்சாட்டிய உறுப்பினர்கள், அந்த நிதியை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். குறிப்பாக, அதிமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் திட்டப் பணிகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, அதிகாரிகளிடமும் தலைவரிடமும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் நீண்ட நேரம் சலசலப்பு நிலவியது.