சேலம் அருகே சோகம்: மது போதையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி வாலிபர் பலி
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். டேங்க்பாடி கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர் தனது நண்பர் உதய் பிரகாஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மது போதையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த மோதலில் விக்ரம் மற்றும் உதய் பிரகாஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டதில், விக்ரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மற்றொரு வாகனத்தில் வந்தவர்கள் உட்பட மொத்தம் மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.