சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பரிந்துரை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா வரும் மார்ச் 5-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, காலியாகவுள்ள அந்த இடத்திற்கு புதிய தலைமை நீதிபதியைத் தேர்வு செய்ய உச்சநீதிமன்றக் கொலீஜியம் குழு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்த ஆலோசனையின் முடிவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, தற்போது கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயரை கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த நியமனம் தொடர்பான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விரைவில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.