கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் கோவில் 11-ம் ஆண்டு விழா: திரு. அண்ணாமலை பங்கேற்பு!
கோவை:
கோவையை அடுத்த மலுமிச்சம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு நாகமலை ஶ்ரீ நாகசக்தி அம்மன் தியான பீடத்தின் 11-ம் ஆண்டு விழா மற்றும் சிறப்பு யாக பூஜைகள் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றன. இந்த விழாவில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றார்.
501 கலச பூஜை மற்றும் தீர்த்த வழிபாடு
ஆண்டு விழாவை முன்னிட்டு, திருக்கோவில் வளாகத்தில் 501 கலச பூஜை மற்றும் புண்ணிய நதிகளின் தீர்த்த பூஜைகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற திரு. அண்ணாமலை அவர்கள், “இந்த புனிதமான நிகழ்வில் பங்கேற்பதை எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சுவாமிகளின் அருளாசி
ஸ்ரீலஶ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் அவர்கள், அன்னை நாகசக்தி அம்மனின் அருளாணையால் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திருக்கோயிலை நிர்மாணித்தார். அன்று முதல் இன்று வரை பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கி, ஆன்மீகப் பணியாற்றி வரும் சுவாமிகளைச் சந்தித்து திரு. அண்ணாமலை அவர்கள் ஆசி பெற்றார்.
மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனை
வழிபாட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
”அன்னை ஶ்ரீ நாகசக்தி அம்மனின் பேரருளால், தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டேன்.”
இந்த நிகழ்வில் திரளான பக்தர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.