வடஇந்தியர்கள் குறித்து கருத்து – கனிமொழி சோமு பேச்சால் சர்ச்சை
தமிழகத்திற்கு வந்து பணியாற்றும் வடஇந்தியர்கள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு தெரிவித்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூரில் திராவிட முன்னேற்ற கழகம் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய கனிமொழி சோமு, ஹிந்தி கற்று தமிழகம் வரும் வடஇந்தியர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதோ, அல்லது பானிபூரி விற்பனை செய்வதோ போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார்.
அவரது இந்த கருத்து அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.