சட்டசபையில் மு.க. ஸ்டாலின் – உடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு: திராவிட முன்னேற்ற கழகம்வில் இணைய திட்டமா..?
2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்வில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆனால், அ.தி.மு.க.வை இதுவரை அவர் மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அது சாத்தியமில்லை என்பது புரிந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் பலரும் ஒவ்வொருவராக விலகி மாற்று கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
தனித்து நிற்கும் சூழலில் உள்ள ஓ. பன்னீர்செல்வம், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில் என்ன தீர்மானம் எடுக்கப்போகிறார்? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தைப்பிறந்தால் வழி பிறக்கும்” என்று அவர் தொடர்ந்து கூறி வந்தாலும், தை மாதத்தில் எந்த முக்கிய அரசியல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் நிர்வாகிகளை சந்தித்த அவர், “அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய நான் தயார்; என்னை இணைக்க அவர்கள் தயார் தானா?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால், அதே நாளில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, “அது எப்போதும் நடைபெறாது” என்று மறுத்துவிட்டார். இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் அவரது அரசியல் முடிவு குறித்து கேள்வி எழுப்பியபோது, “பொறுமையாக இருங்கள்” என்று மட்டும் பதிலளித்தார்.
இந்நிலையில், இன்று யாரும் எதிர்பாராத வகையில் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது அறையில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது அரசியல் விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் அவர் தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துவிட்டாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனெனில், ஓ. பன்னீர்செல்வம் இதுவரை தனி அரசியல் கட்சியை தொடங்காமல், இயக்கம் மட்டுமே நடத்தி வருகிறார். எனவே, தி.மு.க.வுடன் இணைய திட்டமிட்டுள்ளாரா? என்ற யூகங்களும் நிலவுகின்றன.
மேலும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே தி.மு.க.வில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.