மார்ச் 2-வது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரி உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Election Commission of India தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் மே மாதத்தில் முடிவடைவதால், தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் வேகமடைந்துள்ளன.
Tamil Nadu, Puducherry மற்றும் Kerala ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை West Bengal மற்றும் Assam மாநிலங்களில் பல கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.