ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

Date:

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை

ஈரோட்டில் ஆடிட்டர் வீட்டில் இருந்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணன் நகரைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ராஜன். இவர் மதிய நேரத்தில் வெளியே சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

ஆடிட்டர் ராஜன் வெளியே சென்றதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்த வீட்டுச் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம் சென்னை: மருத்துவப் படிப்பில்...

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது...

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய...

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ்

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ் வங்கதேசத்தில்...