தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன்
மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் சிறப்பாக நடைபெறும் என, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
மதுரை மண்டேலா நகரில் வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, பந்தக்கால் நடும் விழா நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மிகப் பிரமாண்டமாக மாநாடு போல் நடைபெறும் என்றும், இதில் அதிகளவான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த பொதுக்கூட்டம், வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.