ஸ்ரீவில்லிபுத்தூர்: தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது அரிவாள் வீச்சு – போலீசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது அரிவாள் வீசிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்குளம் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவரின் மனைவி அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் பாலமுருகனுக்கு எதிராக நீதிபதி சுதாகர் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், நீதிபதி சுதாகர் மீது அரிவாளை வீசியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.