ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் – சென்னை மாணவர் சாதனை
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர் அஸ்வின் குமார், ஒரு நிமிடத்தில் 385 முறை ‘ஸ்பைடர் டிரிப்ளிங்’ செய்து புதிய சாதனை படைத்துள்ளார்.
சென்னை நகரில் உள்ள Dr. M.G.R. Educational and Research Institute (எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்) யில் பயின்று வரும் அஸ்வின் குமார், பல்கலைக்கழக கூடைப்பந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
தொடர்ந்து பயிற்சி மற்றும் முயற்சியின் மூலம், ஒரு நிமிடத்தில் 385 முறை ஸ்பைடர் டிரிப்ளிங் செய்த அவர், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதனை India Book of Records நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
மேலும், இந்த சாதனை Guinness World Records புத்தகத்தில் இடம்பெறவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அஸ்வின் குமாரின் இந்த சாதனை, இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அதிகரித்துள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.