சென்னை: ஊரக, நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் போராட்டம் – போலீசார் கைது
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு, நேரடி ஊதிய முறை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த பணியாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களின் கோரிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், 13வது நாளாக வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, அங்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து பேசிய பணியாளர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.