ரூ.50,000 வழங்கினாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது – அஸ்வத்தாமன்
மக்களுக்கு ரூ.50,000 வழங்கினாலும் திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ.5,000 மட்டுமல்ல, ரூ.50,000 வழங்கினாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்றும் கூறினார். மேலும், கடந்த 5 மாதங்களுக்கு மட்டும் நிதி உதவி வழங்கிய திமுக அரசு, முதல் இரண்டரை ஆண்டுகளுக்கான தொகையையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மக்களை ஏமாற்றும் வகையில் ரூ.1,000 வழங்குவதை மத்திய அரசு தடுக்கிறது என தேர்தல் நேரத்தில் நயவஞ்சகமாக பேசும் முதலமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்திருப்பது மக்களின் சாபக்கேடு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.