சிவராத்திரி: பர்வத மலை ஏற்றத்திற்கு கட்டுப்பாடுகள் – அனுமதி விவரத்தில் தெளிவு இல்லை
திருவண்ணாமலை: சிவராத்திரி விழாவை முன்னிட்டு மீது அதிக அளவில் பக்தர்கள் ஏற அனுமதி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை மாவட்ட நிர்வாகம் தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் தென்மகாதேவமங்கலம் பகுதியில் அமைந்துள்ள 4,560 அடி உயரமுடைய பர்வத மலை, உலகப் புகழ்பெற்ற புனிதத் தலமாகும். மலையின் சிகரத்தில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தொடர்ந்து வருகை தருவது வழக்கம்.
பக்தர்கள் பாதுகாப்பை முன்னிறுத்தியும், மலைப்பாதை மற்றும் சிகரப்பகுதியில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் பல புதிய வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மலையேறும் அனுமதி இருந்த நிலையில், தற்போது அது காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 100 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பாக 18 முதல் 60 வயதுவரை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். கர்ப்பிணிகள், மூத்தவர்கள், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாச மற்றும் இதய நோயாளிகள், உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலையேற வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சிவராத்திரி நாளை முன்னிட்டு திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமல்லாது, பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு கூடுதல் அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் விளக்கம் கோரியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.