மடகாஸ்கரை புரட்டி போட்ட ‘கெஸானி’ புயல்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
துவாமசினாவில் கடும் சேதம்; ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து நாசம்
நாட்டை தாக்கிய ‘கெஸானி’ புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
வடகிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த 9ஆம் தேதி உருவான இந்த சூறாவளி, நகரை மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கியது. இதனால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவித்ததன்படி, சுமார் 18,000 வீடுகள் முற்றிலும் இடிந்து நாசமாகியுள்ளன; மேலும் 50,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. நகரின் 75 சதவீத உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தலைநகர் வில் கனமழை பெய்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாதிப்பின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என மடகாஸ்கர் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், புயலால் இதுவரை 40 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 430 பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாயமான 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.